web log free
December 26, 2025

பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் வீட்டில் கோடிக்கணக்கில் கொள்ளை

பம்பலப்பிட்டி ஸ்கெல்டன் வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் சொகுசு வீட்டினுள் பதுங்கியிருந்து கைத்துப்பாக்கி மற்றும் மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பணம் மற்றும் தங்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீட்டில் இருந்து கைத்துப்பாக்கி , 12 தோட்டாக்கள், மக்னீசியம், 100,000 ரூபா, 6,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 10 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கப் பொருட்கள் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோடீஸ்வர தொழிலதிபர் மற்றும் பணிப்பெண்கள் இருவரும் வீட்டில் இருந்த போதே இந்த திருட்டு நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd