web log free
May 04, 2024

தினேஷ் சாப்டர் கொலை வழக்கில் திருப்பம்

ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் படுகொலை தோல்வியுற்ற ஸ்கிரிப்டை அடிப்படையாகக் கொண்ட நாடகம் என முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி குறிப்பிடுகின்றார்.

இவர் கொலை செய்யப்பட்டு பொரளை மயானத்திற்கு கொண்டு வந்துள்ளமை சந்தேகத்திற்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனுபவம் வாய்ந்த குற்றவாளி இந்தக் கொலையைச் செய்யவில்லை என்று தெரிகிறது என்றும் அவர் கூறுகிறார்.

பிரையன் தாமஸ் சந்தேகப்படும்படி மற்றொரு குழுவால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.