web log free
September 08, 2024

அடிக்கடி அதிகரிக்கும் வாகன விபத்துகள்

வாகன விபத்துக்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

மேலும், அதிகளவானவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் என பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்தின் கல்வி மற்றும் பொது பாதுகாப்பு நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் சேனக கமகே தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்டுகளின் தரம் குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானியில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்காலத்தில் தரப்படுத்தப்பட்ட ஹெல்மெட்களே சந்தையில் கிடைக்கும் என்றார்.

போதைப்பொருள் பாவித்து நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் கருவிகள் ஏற்கனவே இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சேனக கமகே குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் விசேட வேலைத்திட்டம் பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாளொன்றுக்கு வீதி விபத்துக்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 08 ஆக உள்ளது. அவர்களில் 04 அல்லது 05 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என பொலிஸ் பரிசோதகர் சேனக கமகே மேலும் தெரிவித்தார்.

Last modified on Friday, 23 December 2022 04:01