web log free
April 20, 2024

முச்சக்கரவண்டி விபத்தில் ஆறு பேர் படுகாயம்

களுகஹகந்துர - பிடமாருவ பிரதான வீதியில் போஹஸ்தென்ன முச்சந்தி அருகில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியொன்று விபத்துக்கு உள்ளானதில், இரண்டு பிள்ளைகள் மற்றும் பெண் உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்தவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை மாவட்ட வைத்தியாசலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பதுளை பதுலுசிறிகம பகுதியை சேர்ந்தவர்களே இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். உறவினர் வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.