web log free
May 01, 2024

ஆட்கடத்தலில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் மனித கடத்தலில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் அழைப்பாளருமான வசந்த சமரசிங்க தெரிவிக்கின்றார்.

அரசாங்கப் பதவிகளை வகிக்கும் நபர்கள் போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பயன்படுத்தி ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களினால் இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவ்வாறு சுமார் நாற்பது பேர் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் இருந்து 30 முதல் 45 இலட்சம் ரூபா வரை அறவிடுவதாக தெரிவித்த அவர், குறித்த பாராளுமன்ற உறுப்பினர் குறித்த நபரை அந்த நாட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் கழித்து நாடு திரும்பியதாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரில் இந்த அடையாள அட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், எதிர்வரும் காலங்களில் குறித்த நபர்களின் கடவுச்சீட்டு மற்றும் நாடுகளின் நகல் பிரதிகளும் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.