web log free
September 01, 2025

அமைச்சு செயலாளர்களுக்கு ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள எச்சரிக்கை

அரச நிர்வாக சேவையின் வினைத்திறனை பேணும் வகையில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் அவர் செயலாளராக பதவி வகிக்கும் அமைச்சுக்களின் செயல்திறனை அதிகரிப்பதற்காக அடுத்த வருடத்திற்கான இலக்கை வழங்குவார் மற்றும் இலக்கு பின்பற்றப்படுகிறதா என ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் முன்னேற்றம் சரிபார்க்கப்படும்.

06 மாதங்களில் தமது இலக்குகளை பூர்த்தி செய்யாத அமைச்சுச் செயலாளர்களை முன்னேற்றங்களைச் சரிபார்க்கும் போது அவர்களை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த வருடம் 60 வயதை பூர்த்தி செய்யவுள்ள அமைச்சுச் செயலாளர்களில் கணிசமானவர்கள் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சுச் செயலாளர்களும் உடன்படிக்கையில் உள்வாங்கப்படவுள்ளனர்.

உடன்படிக்கையின்படி, பொதுச் சேவைச் செலவினங்களை 25% குறைத்தல், தேவையற்ற செலவுகளைக் குறைத்தல் மற்றும் சுற்றறிக்கைகளின்படி முறையான நடவடிக்கைகள் போன்ற அரச சேவையின் செயல்திறன் தொடர்பான பல ஒப்பந்தங்கள் உட்பட இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd