web log free
September 07, 2024

நாடு முழுவதும் ஹர்த்தால்

மின்கட்டண அதிகரிப்பு மற்றும் மின்வெட்டு காரணமாக இந்த வருடம் நாடு முழுவதும் ஹர்த்தால் பிரச்சாரம் நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அவ்வாறானதொரு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டால் அதற்கு தொழிற்சங்க கூட்டமைப்பு ஆதரவளிக்கத் தயார் என அதன் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலத் தெரிவிக்கின்றார்.

மின்கட்டணத்தை உயர்த்தினால் கண்டிப்பாக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும் என்றும், அதன் மூலம் அதற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயம் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் உள்ள நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி இருப்பதாகவும் 38 நிலக்கரி கப்பல்கள் வந்திருக்க வேண்டும் எனவும் ஆனால் இதுவரை ஆறு கப்பல்களே வந்துள்ளதாக கூறுவது முற்றிலும் பொய்யானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு நாட்டில் பாரிய பிரச்சினையாக இருப்பதால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்கு செல்ல நேரிட்டது எனவும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இதே நிலை ஏற்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.