web log free
June 12, 2026

உணவு ஒவ்வாமை காரணமாக 114 பெண்கள் வைத்தியசாலையில்

கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்திற்குட்பட்ட ஆடைத் தொழிற்சாலையொன்றில் இன்று (ஜன. 3) உணவு விஷமாகி 114 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை அந்த நிறுவனம் வழங்கிய உணவு விஷம் கலந்ததால் அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

நோய்வாய்ப்பட்ட ஆடைத் தொழிலாளர்கள் இமதுவ, அஹங்கம, களுகல மற்றும் கராபிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd