web log free
January 06, 2026

தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் கைது

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலுடன் நேரடியாக தொடர்புடைய அனைவரும் உயிரிழந்தோ அல்லது கைது செய்யப்பட்டோ இருப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்கொலை தாக்குதல் நடத்திய அனைவரும் உயிரிழந்ததுடன், அவர்கள் அடையாளம் காணப்பட்டு விவரங்கள் வெளியாக்கப்பட்டுள்ளதாவும்,  தாக்குதலை நடத்திய குழுவில் குண்டு தயாரிப்பு தொடர்பான பரீட்சியம் பெற்ற இரண்டு பேர் இருந்ததுடன், அவர்களும் உயிரிழந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளா்.

அத்துடன், இந்த தாக்குதலுடன் நேரடியாக தொடர்பு கொண்ட சிலர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd