web log free
April 26, 2025

கலைக்கப்பட்ட பின்னரும் ஊவா மாகாண சபையில் கோடிக்கணக்கில் நிதி மோசடி

6 ஆவது ஊவா மாகாண சபையின் பதவிக் காலம் நிறைவடைந்ததன் பின்னர் மாகாண சபைத் தலைவர் பதவி என்பது பெயரளவிலான பதவியாக மாறியுள்ள போதிலும் தலைவருக்கு மாதாந்தம் 16.3 மில்லியன் ரூபா போக்குவரத்து கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் கூறுகிறது.

அத்துடன் தலைவரின் தனிப்பட்ட உத்தியோகத்தர்கள் 11 பேருக்கு எவ்வித சேவையும் பெறாமல் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக 18.20 மில்லியன் ரூபா மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறைந்த பட்சம் அவர்கள் வருகை மற்றும் புறப்பாடு பதிவு செய்ய எந்த பதிவேடும் பராமரிக்கப்படவில்லை.

2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி முதல் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவதாகவும், மாகாண சபைக்கு வாகனங்கள் உள்ள நிலையில், தலைவருக்கு தகுந்த வாகனம் வழங்கி செலவைக் குறைப்பதற்குப் பதிலாக, மாதாந்தம் போக்குவரத்துக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், அவைத்தலைவரின் மாகாணசபை விஜயம் அல்லது அவர் ஆற்றிய பணிகள் குறித்து ஆராயப்படவில்லை என கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd