web log free
May 05, 2024

நாட்டில் முதலில் நடப்பது ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்டிப்பாக ஒத்திவைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிடுகின்றார்.

அந்த வாக்கெடுப்பை நடத்தாமல் பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய வேட்பு மனு செயற்பாடுகள் மக்களை ஏமாற்றும் வகையில் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற பண்டாரநாயக்க நினைவேந்தல் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.