web log free
July 04, 2025

ஹம்பாந்தோட்டை பதற்றம், துப்பாக்கிச் சூடு, 7 பேர் கைது

ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுக வளாகத்தில் வைத்து கரையோர பாதுகாப்பு அதிகாரிகளை தாக்க முற்பட்ட 07 மீனவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (09) இரண்டு மீனவர் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டதாகவும், கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரையோர பாதுகாப்பு அதிகாரிகளின் அலுவலகம் மீதும் மீனவர்கள் குழு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இரண்டு மீன்பிடி படகுகள் கடலில் மோதியதில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது கடலோர காவல்படை அதிகாரிகள் தலையிட்டு அதனை கட்டுப்படுத்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd