web log free
May 07, 2024

அமைச்சரவை அனுமதி கிடைத்தாலும் இன்னும் திகதி முடிவில்லை

மின் கட்டணத்தை மீண்டும் ஒருமுறை அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும், ஆனால் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கும் திகதி தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கு அனுமதி கோரி கடந்த (02) அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்ததோடு, ஏனையவற்றுக்கு மத்தியில் செலவு சரிசெய்தலுடன் கூடிய விலைச்சூத்திரம் தயாரிக்க முன்மொழியப்பட்டது. 

குறித்த பிரேரணை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணையை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவில் சமர்ப்பித்து அதன் அனுமதி கிடைத்த பின்னர் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.