web log free
July 04, 2025

மேலதிக வருமானத்திற்காக விபச்சாரத்தில் ஈடுபடும் வட மாகாண இளம் பெண்கள்!

தற்போது கொழும்பிலும் தெற்கிலும் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாகாணத்தைச் சேர்ந்த பல இளம் பெண்கள் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மேலதிக வருமானம் ஈட்டுவதற்காக வேறு வழியின்றி விபச்சாரத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் கொழும்பு மருதானையில் விபச்சார விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட பெண்கள் குழுவினால் இது தெரியவந்துள்ளது.

மருதானையிலுள்ள விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், 19 பெண்களை கைது செய்திருந்தனர் அதில் 11 பேர் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள்.

ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிவதாகவும், ஆனால் குடும்பத்தை நடத்துவதற்கு பணம் அனுப்ப முடியாததாலும், வாழ்வதற்கு போதிய வருமானம் இல்லாததாலும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக இளம் பெண்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

இதேவேளை, தென்னிலங்கையில் இருந்து சில தரகர்கள் வடமாகாணத்திற்கு வந்து தனியார் நிறுவனங்களில் வேலை வழங்குவதாக வடக்கிலுள்ள பெண்கள் அமைப்பொன்று வெளிப்படுத்தியுள்ளது. தரகர்கள் இளம் பெண்களை ஏமாற்றி கொழும்பு மற்றும் தெற்கு பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்று குறைந்த நேரத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக அவர்கள் கூறினர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd