web log free
September 01, 2025

ஜனாதிபதியை சந்தித்தது ஏன்?

நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க சென்றதாகவும் ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரை சந்திக்க செல்லவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நேற்று தெரண 360 நிகழ்வில் கலந்து கொண்ட அவர் இ தனை தெரிவித்தார்.

நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியின் அரசியலமைப்பின் பிரகாரம் தமக்கு கடப்பாடு இருப்பதாகவும் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தேர்தலுக்கான சூழலை தயார்படுத்தும் பொறுப்பு அவருக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேசியதாகவும் அதனால் தான் ஜனாதிபதியை சந்திக்க சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd