web log free
May 03, 2024

வேடுவர்கள் குழு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டி

வேடுவர் சமூகத்தின் தலைவரான உருவிகேலகே வன்னில அத்தோ தலைமையிலான குழு எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் முதன்முறையாக போட்டியிட தீர்மானித்துள்ளது.

மஹியங்கனை, சொரணதொட்டை மற்றும் ஹாலிஎல பிரதேச சபைகளுக்கும் பதுளை மாநகர சபைக்கும் தேசிய ஜனநாயக முன்னணியின் கீழ் இவர்கள் போட்டியிடவுள்ளனர்.

தேசிய ஜனநாயக முன்னணியின் மஹியங்கனைக்கான தேர்தல் அமைப்பாளரும் குழுவின் தலைவருமான இந்திக நுவன் குமார மற்றும் ஏனைய வேட்பாளர்கள் நேற்று பதுளை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தினர்.

தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவராக வன்னில அத்தோ தெரிவு செய்யப்படுவார் எனவும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வேடுவர் சமூகம் போட்டியிடவுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“வேடுவர் இனத்தைச் சேர்ந்த பல வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு அடுத்தடுத்த தேர்தல்களில் நாங்கள் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்தோம், ஆனால் அவை எங்களை கைவிட்டு விட்டன," என்று அவர் கூறினார்.