web log free
May 03, 2024

மைத்திரி அணியுடன் உறவு முறிவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா மூத்த துணைத் தலைவர் பதவி உட்பட கட்சியின் அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் அவர் இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.