web log free
February 07, 2026

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

க.பொ.த.பொதுதரத்தில் சித்தியடைந்த மாணவர்களை க.பொ.த உயர்தர வகுப்புகளுக்கு உள்வாங்குவதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது என கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கான சுற்றறிக்கைகள் மூலம் பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, அப்பகுதியின் வட்டாரக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் வசிக்கும் பகுதியில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் ஒரு பாடசாலையைப் பெற ஏற்பாடு செய்யலாம் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2023ம் ஆண்டுக்கான இடைநிலை வகுப்புகளுக்கு (1 – 6 தவிர) குழந்தைகளை சேர்ப்பதற்கான புதிய சுற்றறிக்கையும் வெளியிடப்பட உள்ளதாகவும், அதன்படி, முதல் தவணை நடைபெறும் மார்ச் 27ம் திகதிக்குள் விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுவரை தேசிய பாடசாலைகளுக்கு இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை அமைச்சு வழங்காது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd