web log free
April 20, 2024

உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பழங்குடியின தலைவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பழங்குடியின மக்களுக்கு முறையான அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கப்படாததன் காரணமாக அவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பழங்குடியின தலைவர் உருவரிகே வன்னில இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

மக்களின் தனித்துவமான பொருளாதார, சமூக, கலாசார, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரம் தொடர்பான நடவடிக்கைகளை சட்ட தரப்பினர் கிரிமினல் குற்றங்களாக அறிமுகப்படுத்தியதால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த முறைப்பாட்டில், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், சுற்றாடல் அமைச்சு, பொலிஸ் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கரையோரப் பாதுகாப்பு திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், மகாவலி அதிகார சபை, காணி அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், கடற்றொழில் திணைக்களம் என்பன பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த புகாரில், பழங்குடியின மக்கள் வசிக்கும் இடங்களிலும், அவர்கள் மற்றும் அவர்களது பூர்வீக நிலங்களிலும் நிம்மதியாக வாழ உரிமை கோரியுள்ளனர்.

பழங்குடியின தலைவர் உருவரிகே வன்னிலட்டோ தலைமையிலான குழுவினர் கடந்த 18ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர்.

தம்பனை, பொல்லேபெத்த, ஹென்னானிகல, வாகரை, கரகச்சேனை, தோக்கூர், கட்டப்பறிச்சான் ஆகிய பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆதிவாசி தலைவர்கள் இந்த முறைப்பாட்டை முன்வைத்தனர்.