web log free
August 16, 2025

மொட்டுக் கட்சியின் இன்றைய பரிதாப நிலை

போராட்டத்தின் பின்னர் ஏமாற்றமடைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விரக்தியடைந்துள்ள மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கான விசா மற்றும் ஏனைய ஆவணங்களை தயாரித்து வருவதாக கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐம்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகளிலும் புதிய முன்னணிகளிலும் இணைந்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd