web log free
May 09, 2025

மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கோட்டை நீதவான் திலின கமகே இன்று திறந்த நீதிமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன தன்மீது குற்றம் சாட்டப்பட்ட ஒரு வழக்கில் ஆஜராகியிருந்த போது அவர் குற்றவாளிக் கூண்டில் ஏறவில்லை என்பதே அதற்குக் காரணம்.

பின்னர் இரண்டாவது தடவையாக மைத்திரிபால சிறிசேனவின் பெயர் நீதிமன்றில் அழைக்கப்பட்ட அதேநேரம் அவர் குற்றவாளிக் கூண்டில் பிரவேசித்தார்.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கை மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார். 

இந்த வழக்கை மார்ச் 13ஆம் திகதி மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd