web log free
April 26, 2024

மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் மனுவை ஆராய திகதி குறிப்பு

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.

மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சமர்ப்பித்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ருகாந்த அபேசூரிய, தேசிய பொலிஸ் ஆணைக்குழு இவ்வாறான விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும் ஆணைக்குழு பிரதிவாதியாக பெயரிடப்படவில்லை எனவும் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 

மனுவில் திருத்தம் செய்ய மனுதாரருக்கு அனுமதியளித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுவை பரிசீலிக்க மே 19-ம் திகதி கூடி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார மற்றும் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.