web log free
April 27, 2025

இலங்கை வருகிறார் பான் கீ மூன்

ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், நாட்டின் நிலையான அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பல ஒப்பந்தங்களில் பான் கீ மூன் கைச்சாத்திடவுள்ளார்.

பான் கி-மூன் தற்போது குளோபல் கிரீன் க்ரோத் இன்ஸ்டிடியூட் அல்லது தென் கொரிய அரசு நிறுவனமான GGGI இன் தலைவராக பணியாற்றுகிறார்.

அந்நிறுவனத்தின் தலைவராக பாங்கி மூன் இந்த நாட்டில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார். இலங்கையில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்ற பல்கலைக்கழகம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

அந்த ஒப்பந்தங்களின்படி, கொரியாவுடன் இணைந்து இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். 

இலங்கை வரும் பான் கீ மூன், பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாட உள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக பான் கீ மூன் இதற்கு முன்னர் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd