web log free
September 08, 2024

புது வருமான வரியால் ஆபத்து

மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு புதிய வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஐக்கிய தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் அநியாயமான வரி விதிப்பை இடைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்கு செவிசாய்க்காவிட்டால் நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் தெரிவித்தார்.