web log free
September 08, 2024

வாக்குச் சீட்டுகள் அச்சடிக்க சுமார் 30 கோடி செலவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணியை ஆரம்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரச அச்சக அலுவலகத்திற்கு அறிவித்துள்ளது.

இதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என அரசாங்க அச்சக உத்தியோகத்தர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.

வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குத் தேவையான அடிப்படைப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளாட்சித் தேர்தலுக்காக ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கப்பட உள்ளன.

இந்த அச்சிடும் பணிகளுக்காக கிட்டத்தட்ட முப்பது கோடி ரூபாய் செலவிடப்படும் என்று அரசு அச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முதற்கட்ட முன்பணம் கோரியுள்ளதாக அரசாங்க ஊடகப் பிரிவு அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டு அச்சடிக்க 20 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. பொருளாதார நிலை காரணமாக காகிதத்தின் விலை அதிகரிப்பு மற்றும் அச்சிடும் செலவுகள் காரணமாக இந்த ஆண்டு வாக்குச் சீட்டு அச்சடிக்க அதிக பணம் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான ஏனைய ஆவணங்களை அச்சடிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கங்கானி கல்பனா லியனகே மேலும் தெரிவித்தார்.