web log free
September 08, 2024

காதலியை கழுத்தறுத்து கொன்ற காதலனுக்கு விளக்கமறியலில் நீடிப்பு

குதிரைப் பந்தய அரங்கில் கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, இந்த மாணவர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவி அவரது காதலி என ஊடகங்களில் செய்தி வெளியானது.