web log free
May 18, 2024

'மக்கள் சேவை தொடரும்’

எதிர்க்கட்சித் தலைவருக்குரிய அலுவலகம் இல்லாவிட்டாலும், மக்களுக்காக முன்னெடுக்கும் தனது பணிகள் தொடருமென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல - நெலும் மாவத்தையிலுள்ள தனது அலுவலகத்தில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல், மோசடிகளைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்த அவர், இவ்வருடம், தேர்தல் வரு​டமென்பதால், அதற்கு முகங்கொடுக்க, தனது முகாமை பலப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.