web log free
April 18, 2024

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

கடுவலை பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைபொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 556 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும், ஹோகந்தர பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.