web log free
May 05, 2026

தர்ஷன ஹந்துன்கொட பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன் ஹந்துங்கொடவுக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

டுபாயில் இருந்து நாடு திரும்பிய போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன் ஹந்துங்கொட இன்று (06) காலை கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு பிணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வன்முறையை வெளிப்படுத்தும் காணொளி வெளியானது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் தர்ஷன ஹந்துங்கொட கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd