web log free
May 11, 2024

பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம்

13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் மகா சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன்போது பிக்குகள் பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றத்தை நோக்கி செல்ல முற்பட்ட போதே இவ்வாறு குழப்பநிலை ஏற்பட்டது.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மகாசங்கத்தினர் இன்று (08) கோட்டை, பெரகும்பா பிரிவெனாவிற்கு அருகில் இந்த எதிர்ப்புப் பேரணியை ஆரம்பித்துள்ளனர்.

பேரணியை பொலிஸார் தடுத்து நிறுத்திய போதும், பிக்குகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.