web log free
September 08, 2024

வீட்டு அறையில் இரண்டு பெண்களின் சடலம் மீட்பு

கினிகத்ஹேன கந்த சுரிதுகமவில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்கள், தாய் மற்றும் அவரது மகள் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண்கள் 30 மற்றும் 50 வயதுடைய கினிகத்தேனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் படுக்கையறையில் உள்ள படுக்கையில் தாயும் மகளும் இறந்து கிடந்தனர்.

நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கினிகத்தேனை பொலிஸார் இந்த மரணங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வாழைச்சேனையில் மேலும் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனையைச் சேர்ந்த 52 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.