web log free
May 02, 2024

மக்களை வீதிக்கு இறக்கி தேர்தல் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயார்

தேர்தலை நடத்தாவிட்டால் இலட்சக்கணக்கான மக்களை வீதிக்கு இறக்கி பிரச்சினையை தீர்க்க தயார் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஆனால் அது அவரது நம்பிக்கையல்ல என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் கருத்துத் தெரிவித்தார்.