web log free
December 10, 2025

மரண தண்டனை குறித்து ஜனாதிபதி

இலங்கையிலுள்ள எந்தவொரு நீதிமன்றமும் பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடுவதில்லை என தற்போதைய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு 2019 ஆம் ஆண்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆஜரானார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd