web log free
August 12, 2025

பதவி விலக மாட்டேன் - பொரலுகொட சிங்கம் கர்ஜனை!

பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அப்பதவிக்கு அமர்த்துவதற்காக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஆதரவை கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்த கருத்து தொடர்பில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்க வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் சதித்திட்டத்தின் ஒரு படியே இவ்வாறான அறிக்கைகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறான பிரேரணையோ கலந்துரையாடலோ இங்கு இடம்பெறவில்லை எனவும் பிரதமர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd