web log free
May 06, 2024

ரணில் தலைமையில் விரைவில் புதிய அரசியல் கூட்டணி

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பின் பல ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளருடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய செயல்பாடுகளையும் அவர் விமர்சித்தார்.