web log free
August 15, 2025

ஹரக் கட்டா , குடு சலிந்த உள்ளிட்ட 7 பேர் கைது

ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இரு பாரிய வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உட்பட 7 பேர் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் மடகாஸ்கர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களில் பெண் ஒருவரும் உள்ளதாகவும் ஏனையவர்கள் பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் நாட்டின் பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களில் மூவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் பாணந்துறையில் அம்புலன்ஸ் சாரதி ஒருவரை துப்பாக்கியால் சுட்டதில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் பொழுதுபோக்கிற்காக அண்டனானரிவோ விமான நிலையத்திற்கு வந்தபோது மடகாஸ்கரின் குடிவரவு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd