web log free
April 28, 2025

10 கிலா தங்கம் கடத்திய 5 பேர் விமான நிலையத்தில் கைது

160 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான தங்கத்தை கடத்த முற்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று காலை UL-141 விமானம் மூலம் இந்தியாவின் மும்பைக்கு தப்பிச் செல்ல முற்பட்டதாக சுங்க பிரதிப் பணிப்பாளரும் (சட்ட) ஊடகப் பேச்சாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார்.

சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் தங்கம் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார். அவர்களது பயணப் பையில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டது.

விமான நிலைய குடிவரவு பகுதியில் தங்கியிருந்த இந்திய பிரஜை தொடர்பில் இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுங்க விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அந்த இந்திய பிரஜையும் மேலதிக விசாரணைகளுக்காக சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பேச்சாளர் தெரிவித்தார்.

அவர்களிடம் இருந்து 10.5 கிலோ தங்க நகைகள், ஜெல் வடிவிலான தங்கத் துண்டுகள், தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியதாக அவர் கூறினார்.

இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.160 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலைய சுங்க பிரிவின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

Last modified on Saturday, 11 March 2023 05:35
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd