web log free
July 03, 2025

பிரதேசவாசிகளால் ஏளனம் செய்யப்பட்ட இரண்டு அமைச்சர்கள்

குருநாகல், பமுனகொடுவ பிரதேசத்தில் கலாசார நிலையமொன்றை திறந்து வைப்பதற்காக சென்ற அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவரை அப்பகுதி மக்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர்.

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் ஆகியோர் கலாசார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்தது.

அந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்தினர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd