web log free
April 18, 2024

தடம் புரண்டது யாழ்தேவி ரயில்

கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ்தேவி நகரங்களுக்கு இடையிலான விரைவு ரயில் ஒருகுடவத்த புகையிரத பாலத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பிரதான பாதையில் இயங்கும் ரயில் தடைபட்டுள்ளதாக பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு நோக்கி வரும் சில புகையிரதங்களில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தடம் புரண்ட யாழ்தேவி புகையிரதத்தின் மீட்பு பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.