web log free
July 03, 2025

எரிபொருள் விலை விரைவில் பாரிய அளவில் குறையும்

ஏப்ரலில் இடம்பெறும் எரிபொருள் விலை திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை மின்சார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நேற்று மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சில் இடம்பெற்றது.

மின்சார சபையின் உத்தேச மறுசீரமைப்பு வேலைத்திட்டம், கூட்டு உடன்படிக்கைகள், மின்சார கட்டண முறை மற்றும் அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர விடுத்துள்ள ட்வீட் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd