web log free
December 08, 2025

விடைத்தாள் திருத்தும் பணி குறித்து கல்வி அமைச்சர் கருத்து

உயர்தரப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவடைந்த போதிலும் விடைத்தாள் திருத்தும் பணி இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலை மதிய உணவுத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்குடன் இன்று (13) மட்டக்குளி புனித ஜோன் மகா வித்தியாலயத்தின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பல்கலைக்கழக ஆசிரியர் சமூகம் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இணைந்து பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்து விடைத்தாள் திருத்தும் பணியை விரைவில் ஆரம்பிக்கும் என நம்புவதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd