web log free
April 28, 2025

மாவனெல்ல பிரதேச சபை தலைவருக்கு நேர்ந்த கதி

மாவனெல்லை பிரதேச சபையின் தலைவர் பதவியிலிருந்து R.P.நொயெல் தசந்த ஸ்டீபன் நீக்கப்பட்டுள்ளார்.

உடன் அமுலாகும் வகையில் பிரதேச சபையின் உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

சபரகமுவ மாகாண ஆளுநரால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

நொயெல் தசந்த ஸ்டீபனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டமையால், ஆளுநரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்டடத் திட்டமொன்றுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 20 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மாவனெல்லை பிரதேச சபை தலைவர் தசந்த ஸ்டீபன் மற்றும் அவரது சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd