web log free
April 23, 2026

60 மில்லியன் கேட்கும் தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த தமது ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவுக்காக 60 மில்லியன் ரூபாவை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

OT கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, பணியாளர் அதிகாரிகளுக்கான விடுமுறைக் கொடுப்பனவுகளுக்கு (ரூ. 12.8 மில்லியன்), சேவைக்காகத் திரும்ப அழைக்கப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் (ரூ. 2.2 மில்லியன்) மற்றும் அலவன்ஸுடன் கூடிய சாதாரண ஊதியம் (ரூ. 12.7 மில்லியன்) ஆகியவற்றுக்கான நிதியை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியிடம் இந்த நிதிக்கான கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

திறைசேரி தேர்தலுக்கு என மார்ச் 14 முதல் 100 மில்லியன் முதல் தவணையாக விடுவிக்கப்பட்டதை தவிர மீதி நிதி வழங்காமல் தடுமாறும் நிலையில் மேலதிக நேர நிதியை விடுவிக்க தேர்தல் ஆணைக்குழுவால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd