web log free
April 25, 2024

பொலிஸ் வீடியோக்களை வெளியிடுவதை தடை செய்கிறது பொலிஸ் தலைமையகம்

பொலிஸ் சோதனைகள், நடவடிக்கைகள், சந்தேக நபர்களின் விசாரணைகள், கைதுகள் போன்றவற்றின் வீடியோக்கள் மற்றும் படங்கள் ஊடகங்கள் மூலம் பகிரங்கமாக வெளியிடுவதைத் தடை செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையத் தளபதிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மீனகாயா ரயிலில் ஒரு குழந்தையை கைது செய்து விசாரணை செய்யும் வீடியோ காட்சிகள் அனைத்து முக்கிய ஊடகங்களிலும் பரப்பப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் விசாரணைக்கு உட்படுத்தப்படும் விதம் தொடர்பில் ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்வதால் சந்தேகத்திற்குரிய நபரை தர்மசங்கடப்படுத்துவதுடன் பொலிஸ் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பொலிஸார் மேற்கொள்ளும் சோதனைகளுக்கு ஊடகவியலாளர் குழுவை அழைத்துச் செல்வதை நிறுத்துமாறு பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.