web log free
September 06, 2025

குடி போதையில் வாகனம் செலுத்தினால் இனி ஆபத்து

குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் நபர்களை பொலிஸ் பிணையில் விடுவிப்பதில்லை என பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பொலிஸ் பிணையில் விடுவிக்க பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளுக்கு அதிகாரம் இருந்ததாகவும், ஆனால் அது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இனிமேல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்படாமல் நேரடியாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் ஓட்டிச் செல்லும் வாகனத்தை சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அதுவும் இடைநிறுத்தப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் வாகனம் விடுவிக்கப்படும்.

போக்குவரத்து டிஐஜி சகல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளையும், போக்குவரத்து நிலையத் தளபதிகளையும் வரவழைத்து அண்மையில் இது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd