web log free
May 06, 2024

ரணிலின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில் சஜித் அணி உறுப்பினர் கைது

போராட்டத்தின் போது கொள்ளுப்பிட்டி ஐந்தாம் வீதியில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கோட்டே மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பிட்டகோட்டை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தொடர்பில் தெரியவந்த தகவலுக்கு அமைய, சந்தேகநபர் நேற்று (27) இரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வீட்டிற்கு தீ வைக்க சதி, உதவி மற்றும் ஆதரவு வழங்கியமைக்காக இவர் கைது செய்யப்பட்டார்.