web log free
August 07, 2025

அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிபுணர்கள் குழுவொன்று அண்மையில் ஜனாதிபதியை சந்தித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

கம்பஹா பிரதேசத்தில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd