web log free
April 29, 2026

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

அதன்படி, CPC மற்றும் அரசு ஆகிய இரண்டும், தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளன, இதன் மூலம் பொதுமக்கள் பீதியடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விரைந்து செல்வதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

முன்னதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவும், நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாகவும், விநியோகம் வழமைபோல் தொடரும் என்றும் உறுதியளித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd