web log free
July 04, 2025

லஞ்சம் ஒழிப்பு பிரிவிற்கு செல்லுமாறு சஜித்திற்கு அழைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க யாராவது தயாராக இருந்தால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவின் திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் எவருக்கும் பணம் கொடுத்து அரசாங்கத்தில் இணைய வேண்டிய அவசியம் இல்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சி அவ்வாறானதொரு கட்சியல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தேவை ஏற்படும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதாக கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd