web log free
May 03, 2024

ரணிலை விடவும் தகுதியானவர்கள் மொட்டு கட்சியில் உள்ளனர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்ற ரீதியில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக  ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க முன்வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர், அமைச்சர் ஒருவர் தனிப்பட்ட கருத்தைக் கூறலாம்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியானவர்கள் பொதுஜன பெரமுனவில் உள்ளதா என ஊடகவியலாளர்கள் வினவிய போது, ​​அதற்கு தகுதியானவர்கள் கட்சியில் இருப்பதாக தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.